search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    ஆலங்குளம் அருகே டிரைவருக்கு அரிவாள் வெட்டு: தந்தை -2 மகன்கள் கைது

    ஆலங்குளம் அருகே டிரைவரை அரிவாளால் வெட்டிய தந்தை, அவரது 2 மகன்கள் கைது செய்யப்பட்டனர்.
    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் காலனி தெருவைச் சேர்ந்தவர் சின்ன குட்டி (65). இவரது மகன்கள் சுந்தரம் (43) ரவிசந்திரன் (35). ரவிச்சந்திரன்  ஆலங்குளம் பேருந்து நிலைய ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார். 

    காளத்திமடம் மாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி (34).  இவரும் ஆட்டோ ஓட்டுனர். ஒரே பகுதியில் தொழில் செய்து வருவதால் இருவரும் நண்பர்களாயினர்.

    இந்நிலையில் ராமசாமிக்கும் சின்ன குட்டியின் குடும்பத்தில் உள்ள பெண் ஒருவருக்கும் செல்போன் மூலம் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு ராமசாமி அந்தப் பெண்ணுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். 

    இதை அறிந்த சின்ன குட்டி அந்தப் பெண் மூலம் ராமசாமியை துத்தி குளத்திற்கு வரவழைத்தார்.  
     
    அங்கு வந்த ராமசாமியை சின்ன குட்டி மற்றும் அவரது மகன்கள் ரவிச்சந்திரன், சுந்தரம்  ஆகியோர் அரிவாள் மற்றும் கம்பு கொண்டு தாக்கினர். இதில் ராமசாமி படுகாயமடைந்தார். 

    தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமசாமியை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    அங்கு முதலுதவிக்கு பின்னர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    இதுதொடர்பாக வழக்குப் பதிந்த ஆலங்குளம் போலீசார் சின்ன குட்டி மற்றும் அவரது 2 மகன்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×