என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கோப்புபடம். கோப்புபடம்.](https://img.maalaimalar.com/Articles/2022/May/202205081458513792_Tamil_News_TENKASI-NEWS---Father-And-His-2-sons-arrested-in-Billhook_SECVPF.gif)
X
கோப்புபடம்.
ஆலங்குளம் அருகே டிரைவருக்கு அரிவாள் வெட்டு: தந்தை -2 மகன்கள் கைது
By
மாலை மலர்8 May 2022 9:28 AM GMT (Updated: 8 May 2022 9:28 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஆலங்குளம் அருகே டிரைவரை அரிவாளால் வெட்டிய தந்தை, அவரது 2 மகன்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் காலனி தெருவைச் சேர்ந்தவர் சின்ன குட்டி (65). இவரது மகன்கள் சுந்தரம் (43) ரவிசந்திரன் (35). ரவிச்சந்திரன் ஆலங்குளம் பேருந்து நிலைய ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
காளத்திமடம் மாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி (34). இவரும் ஆட்டோ ஓட்டுனர். ஒரே பகுதியில் தொழில் செய்து வருவதால் இருவரும் நண்பர்களாயினர்.
இந்நிலையில் ராமசாமிக்கும் சின்ன குட்டியின் குடும்பத்தில் உள்ள பெண் ஒருவருக்கும் செல்போன் மூலம் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு ராமசாமி அந்தப் பெண்ணுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
இதை அறிந்த சின்ன குட்டி அந்தப் பெண் மூலம் ராமசாமியை துத்தி குளத்திற்கு வரவழைத்தார்.
அங்கு வந்த ராமசாமியை சின்ன குட்டி மற்றும் அவரது மகன்கள் ரவிச்சந்திரன், சுந்தரம் ஆகியோர் அரிவாள் மற்றும் கம்பு கொண்டு தாக்கினர். இதில் ராமசாமி படுகாயமடைந்தார்.
தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமசாமியை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவிக்கு பின்னர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிந்த ஆலங்குளம் போலீசார் சின்ன குட்டி மற்றும் அவரது 2 மகன்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)