search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மின்கம்பத்தில் வேன் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சாவு

    நெல்லை அருகே மின் கம்பத்தில் வேன் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த பெண் பலியனார்.
    நெல்லை:

    நெல்லையை அடுத்த தாழையூத்து குறிச்சிகுளம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் வேல். இவரது மனைவி சங்கரம்மாள் (வயது 65). 

    இவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மீன் அரவை மில்லில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4-ந் தேதி காலை பணியை முடித்துக்கொண்டு வேனில் தாழையூத்துக்கு வந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக சாலையோர மின்கம்பத்தில் வேன் மோதியது. இதில் வேனை ஓட்டி வந்த டிரைவர் ஈஸ்வரமூர்த்தி, சங்கரம்மாள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சங்கரம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×