search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    தமிழகத்தில் இன்று புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு

    கொரோனாவில் இருந்து மேலும் 56 பேர் இன்று குணம் அடைந்துள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில் நேற்றை விட இன்று பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.  தமிழத்தில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 58 ஆக பதிவாகியிருந்தது.

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:  

    தமிழகத்தில் இன்று புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  

    இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 54 ஆயிரத்து 217- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 56 பேர் இன்று குணம் அடைந்துள்ளனர்.  

    கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.  தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 17 ஆயிரத்து 701 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 34 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×