search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைதான போதை லோகேஷ்
    X
    கைதான போதை லோகேஷ்

    கஞ்சாவுடன் ரவுடி உள்பட 3 பேர் கைது

    3 கிலோ கஞ்சாவுடன் ரவுடி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மதுரை

    மதுரை முள்ளிப்பள்ளம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தீப்ராஜ் (வயது 32). இவர் ஆவின் நகரில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் லாரி டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் லாரியை கம்பெனிக்கு ஓட்டி வந்தார். அலுவலக நுழைவாயிலில், 4 பேர் கும்பல் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டிருந்தனர். 

    அவர்களிடம், சந்தீப்ராஜ் “தொழில் நடக்கும் இடத்தில் இப்படி செய்கிறீர்களே?’ என்று நியாயம் கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த 4 பேரும் அவரை இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் சந்தீப்ராஜ் மண்டை உடைந்தது. 

    இந்தநிலையில் குடிதண்ணீர் கம்பெனியில் இருந்த நண்பர்கள் கார்த்தி, சுந்தரபாண்டி, சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, சந்தீப்ராஜை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். மாநகர வடக்கு துணை கமிஷனர் ராஜசேகர் மேற்பார்வையில், அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனை பேரில், இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளிகளை தேடிவந்தனர். 

    லாரி டிரைவர் சந்தீப்ராஜை  தாக்கிய பாலாஜி நகர் பிரதீப் குமார் (24), ஆவின் நகர் ஆஷிக் ராஜா (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய யாகப்பா நகர், வைகை வீதி, போதை லோகேஷ் (22), யாகப்பா நகர் ஜெயப்பிரகாஷ் ஆகியோரை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் போதை லோகேஷ் வண்டியூர் சுடுகாட்டுப் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. அவரை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்தனர். 

    அப்போது அவன் ஆவின் நகர் சந்தீப்ராஜ் மண்டையை உடைத்தது, திண்டுக்கல் மாவட்டம் சுரக்காய் பட்டியில் இருந்து 3 கிலோ கஞ்சாவை வாங்கி வந்து வண்டியூர் சுடுகாட்டில் பதுக்கி வைத்தது ஆகிய குற்றங்களை ஒப்புக் கொண்டான். இதனைத் தொடர்ந்து அண்ணாநகர் போலீசார் போதை லோகேசை கைது செய்தனர். 
    Next Story
    ×