search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெல்லை பெருமாள்புரத்தில் அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல் -வாலிபர் கைது

    நெல்லை பெருமாள்புரத்தில் அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து வாலிபர் கைது செய்தனர்.
    நெல்லை:

    ரெட்டியார்பட்டி பகுதியில் நேற்று பெருமாள்புரம்  சப்-இன்ஸ்பெக்டர் நயினார் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அவ்வழியே ரெட்டியார்பட்டி திருவள்ளுவர் தெருவை சேர்ந்த மாரிமுத்து (31) என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரியை சோதனையிட்டதில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக செம்மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

    அதனை போலீசார் கைப்பற்றிய போலீசார் டிப்பர் லாரி மற்றும் 3 யூனிட் அளவு  செம்மண் ஆகியவற்றை பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.
    Next Story
    ×