என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அஜித் ரசிகர்கள் சார்பில் குழந்தைகள் - நோயாளிகளுக்கு உணவு
Byமாலை மலர்5 May 2022 10:29 AM GMT (Updated: 5 May 2022 10:29 AM GMT)
முருகம்பாளையம் காது கேளாதோர் பள்ளியில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட தலைமை தல அஜித் ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பாக அஜித் குமார் பிறந்த நாள் விழா திருப்பூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட தலைவர் வாத்தியார் மா.ரமேஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பழம் ரொட்டி பிஸ்கட் வழங்கப்பட்டது. அதேபோல் மகாத்மா கருணை இல்லத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.
தொடர்ந்து முருகம்பாளையம் காது கேளாதோர் பள்ளியில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. அதேபோல் இளைஞரணி தலைமை சார்பில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அவிநாசியில் சேவூர் ஒன்றியம் சார்பில் குழந்தைகளுக்கு குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. சாமளாபுரத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பொருளாளர் ஆனந்த், தலைமை அமைப்பாளர்கள் முத்துராஜ், செந்தில், ரவி, சாமளாபுரம் நகர தலைவர் ரவிசங்கர், இளைஞர் அணி பாலு, அருண், மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண், கோவிந்தராஜ், மங்கலம் ஜெயராஜ், நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X