என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குமாரபாளையத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்5 May 2022 10:22 AM GMT (Updated: 5 May 2022 10:22 AM GMT)
குமாரபாளையத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ்(வயது25). இவர் அங்குள்ள தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார். மேலும் பிளாஸ்டிக் கதவுகள் பிட்டிங் செய்யும் கூலி வேலையில் ஈடுபட்டு வந்தார்.
இவரது தாயார் உடல்நலமில்லாமல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கடந்நாத 2 நாட்களாக ஈரோடு மருத்துவமனையில் இருந்த இவர் நேற்று வீட்டிற்கு வந்தார். மதியம் திடீரென அவர் வீட்டின் உள்ளே சேலையால் தூக்கு போட்டுக்கொண்டார்.
இதை பார்த்த அவரது மனைவி கவிதாவின் சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்து, உடலை இறக்கினர். பின்பு அவரை குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே அவர் இறந்தாதாக டாக்டர்கள் கூறினர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீஷ் தற்கொலைக்கு காரணம் என்ன? தாய் உடல்நலம் பாதித்த வேதனையில் அவர் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X