என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அட்சய திருதியை- விழுப்புரம் நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
Byமாலை மலர்3 May 2022 10:21 AM GMT (Updated: 3 May 2022 10:21 AM GMT)
விழுப்புரம் நகரில் உள்ள அனைத்து தங்க ஆபரண கடைகளிலும் நகைகள் வாங்க பெண்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
விழுப்புரம்:
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசை தினத்திலிருந்து 3ம் நாளை அட்சய திருதியை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த அட்சய தினத்தில் எந்தவொரு பொருட்கள் வாங்கினாலும் தொடர்ந்து அந்த பொருட்கள் அதிகளவில் வந்து நம்மிடம் சேரும் என நம்பிக்கை. அதேபோல் அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால் செழிப்பாகவும், அதிர்ஷ்ட்மாகவும் இருக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை.
ஆனால் பொதுவாக சித்திரை மாதத்தில் 3ம் நாளில் தங்கம் மட்டுமில்லாமல் எந்தபொருள் வாஙகினாலும் அதன் மதிப்பும், மீண்டும் வாங்குகின்ற சக்தியும் நம்மிடையே உருவாகும் என்ற நம்பிக்கை தமிழகத்தில் பொதுமக்களிடையே ஒரு கருத்து உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக ஜவுளிக்கடைகளில் தமிழ் மாதமான ஆடி மாதம் விற்பனை குறைந்து காணப்பட்டது. இதனை சரிக்கட்டும் நோக்கத்தில் வணிகர்கள் ஆடித்தள்ளுபடி என்ற புதிய யுக்தியை கையாண்டு தீபாவளி பொங்கல் விழாக்கால விற்பனையை விட மும்மடங்கு உயர்த்தி உள்ளனர்.
அதே போல் தான் தற்பொழுது நகை கடை உரிமையாளர்கள் தங்களுக்கு சாதகமாக அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்கினால் வாங்கும் சக்தி பன்மடங்கு உயரும் என கூறி தங்களின் வியாபாரத்தை பெருக்கிக் கொண்டனர். ஒருவகையில் பெண்கள் மறைமுகமாக சேமிப்பு பழக்கத்தை உருவாக்கிக் கொண்டனர்.
இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பன்னாட்டு நிறுவனங்கள் முதல், கார்ப்பரேட் நிறுவனங்கள், சாதாரண நகை கடை வரை தங்கம் வாஙகுவதற்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது. இன்று விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள அனைத்து தங்க ஆபரண கடைகளிலும், விழுப்புரம் புதுவை சாலையில் அமைந்துள்ள கடையிலும், மேலும் விழுப்புரம் நகரில் உள்ள அனைத்து தங்க ஆபரண கடைகளிலும் நகைகள் வாங்க பெண்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசை தினத்திலிருந்து 3ம் நாளை அட்சய திருதியை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த அட்சய தினத்தில் எந்தவொரு பொருட்கள் வாங்கினாலும் தொடர்ந்து அந்த பொருட்கள் அதிகளவில் வந்து நம்மிடம் சேரும் என நம்பிக்கை. அதேபோல் அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால் செழிப்பாகவும், அதிர்ஷ்ட்மாகவும் இருக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை.
ஆனால் பொதுவாக சித்திரை மாதத்தில் 3ம் நாளில் தங்கம் மட்டுமில்லாமல் எந்தபொருள் வாஙகினாலும் அதன் மதிப்பும், மீண்டும் வாங்குகின்ற சக்தியும் நம்மிடையே உருவாகும் என்ற நம்பிக்கை தமிழகத்தில் பொதுமக்களிடையே ஒரு கருத்து உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக ஜவுளிக்கடைகளில் தமிழ் மாதமான ஆடி மாதம் விற்பனை குறைந்து காணப்பட்டது. இதனை சரிக்கட்டும் நோக்கத்தில் வணிகர்கள் ஆடித்தள்ளுபடி என்ற புதிய யுக்தியை கையாண்டு தீபாவளி பொங்கல் விழாக்கால விற்பனையை விட மும்மடங்கு உயர்த்தி உள்ளனர்.
அதே போல் தான் தற்பொழுது நகை கடை உரிமையாளர்கள் தங்களுக்கு சாதகமாக அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்கினால் வாங்கும் சக்தி பன்மடங்கு உயரும் என கூறி தங்களின் வியாபாரத்தை பெருக்கிக் கொண்டனர். ஒருவகையில் பெண்கள் மறைமுகமாக சேமிப்பு பழக்கத்தை உருவாக்கிக் கொண்டனர்.
இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பன்னாட்டு நிறுவனங்கள் முதல், கார்ப்பரேட் நிறுவனங்கள், சாதாரண நகை கடை வரை தங்கம் வாஙகுவதற்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது. இன்று விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள அனைத்து தங்க ஆபரண கடைகளிலும், விழுப்புரம் புதுவை சாலையில் அமைந்துள்ள கடையிலும், மேலும் விழுப்புரம் நகரில் உள்ள அனைத்து தங்க ஆபரண கடைகளிலும் நகைகள் வாங்க பெண்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X