என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஓட்டப்பிடாரம் அருகே மாயமான கல்லூரி மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு
Byமாலை மலர்28 April 2022 9:19 AM GMT (Updated: 28 April 2022 9:19 AM GMT)
ஓட்டப்பிடாரம் அருகே மாயமான கல்லூரி மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் அருகே வடக்கு ஆரைக்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுக பாண்டி. இவரது மகள் மாரீஸ்வரி (வயது 19). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வந்தார் .
இவர் வீட்டில் இருக்கும் நேரங்களில் செல்போனை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதையடுத்து கடந்த 25-ந் தேதி மாரீஸ்வரி திடீரென மாயமானார். அக்கம், பக்கம் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்நிலையில் வடக்கு ஆரைக்குளம் கிராமத்தில் உள்ள கிணற்றில் மாரீஸ்வரி இறந்து கிடந்தார். இதையறிந்த போலீசார் மாரீஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் எப்படி இறந்தார் என பசுவந்தனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X