search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்த சுகிர்தலா.
    X
    மகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்த சுகிர்தலா.

    அம்பை போலீஸ் டி.எஸ்.பி. மீது கலெக்டரிடம் பெண் புகார்

    அம்பை போலீஸ் டி.எஸ்.பி. மீது கலெக்டரிடம் அம்பை தாலுகா அடையகருங்குளம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் தெரிவித்து மனு அளித்தார்.
    நெல்லை:

    அம்பை தாலுகா அடையகருங்குளம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவசாமி நாதன் இவரது மனைவி  சுகிர்தலா (வயது 40). இவர் இன்று தனது மகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் வந்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் கடந்த 7-ந் தேதி விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். எங்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நானும் எனது குழந்தைகளும் அடைய கருங்குளத்தில் உள்ள எங்களது வீட்டில் இருந்தோம்.

     கடந்த 21-ந் தேதி அம்பை போலீஸ் டி.எஸ்.பி. பிரான்சிஸ் மற்றும் அவரது டிரைவர் ஆகியோருடன் இரண்டு பெண்கள் எங்களது வீட்டிற்கு வந்தனர்.அவர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த சில ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டனர்.

    இது தொடர்பாக நாங்கள் கேட்டபோது அவர்கள் எங்களை மிரட்டினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
    Next Story
    ×