search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    பெண்ணை தாக்கி தகராறில் ஈடுபட்ட உறவினர் கைது

    சென்னை பழவந்தாங்கல் பகுதியில் பெண்ணை கையை பிடித்து இழுத்து தகராறு செய்து கையால் தாக்கிய உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    பழவந்தாங்கல்:

    சென்னை பழவந்தாங்கல் நேரு காலனியைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் நேற்று காலை வீட்டினருகே நடந்து சென்றபோது, அவரது உறவினரான வினோத்குமார் என்பவர் ரேவதியை வழிமறித்து கையை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார். உடனே ரேவதி சத்தம் போடவே, வினோத்குமார் ரேவதியை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.

    இது குறித்து ரேவதி பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், விசாரணை செய்யப்பட்டது. பழவந்தாங்கல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பந்தப்பட்ட வினோத்குமாரை பிடித்து விசாரணை செய்தபோது, வினோத்குமார் ரேவதியின் கையை பிடித்து இழுத்து தகராறு செய்து தாக்கியது தெரியவந்தது.

    அதன்பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு பிரிவு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.

    விசாரணையில் வினோத்குமார் ரேவதியின் உறவினர் என்பதும், ஏற்கனவே வினோத்குமார் கடந்த பிப்ரவரி மாதம் ரேவதியிடம் தகராறு செய்து, ரேவதியை தலையில் தாக்கி இரத்தக்காயம் ஏற்படுத்தியது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட  வினோத்குமார், விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×