என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண்ணை தாக்கி தகராறில் ஈடுபட்ட உறவினர் கைது
Byமாலை மலர்23 April 2022 10:36 AM GMT (Updated: 23 April 2022 10:36 AM GMT)
சென்னை பழவந்தாங்கல் பகுதியில் பெண்ணை கையை பிடித்து இழுத்து தகராறு செய்து கையால் தாக்கிய உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பழவந்தாங்கல்:
சென்னை பழவந்தாங்கல் நேரு காலனியைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் நேற்று காலை வீட்டினருகே நடந்து சென்றபோது, அவரது உறவினரான வினோத்குமார் என்பவர் ரேவதியை வழிமறித்து கையை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார். உடனே ரேவதி சத்தம் போடவே, வினோத்குமார் ரேவதியை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.
இது குறித்து ரேவதி பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், விசாரணை செய்யப்பட்டது. பழவந்தாங்கல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பந்தப்பட்ட வினோத்குமாரை பிடித்து விசாரணை செய்தபோது, வினோத்குமார் ரேவதியின் கையை பிடித்து இழுத்து தகராறு செய்து தாக்கியது தெரியவந்தது.
அதன்பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு பிரிவு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.
விசாரணையில் வினோத்குமார் ரேவதியின் உறவினர் என்பதும், ஏற்கனவே வினோத்குமார் கடந்த பிப்ரவரி மாதம் ரேவதியிடம் தகராறு செய்து, ரேவதியை தலையில் தாக்கி இரத்தக்காயம் ஏற்படுத்தியது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட வினோத்குமார், விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை பழவந்தாங்கல் நேரு காலனியைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் நேற்று காலை வீட்டினருகே நடந்து சென்றபோது, அவரது உறவினரான வினோத்குமார் என்பவர் ரேவதியை வழிமறித்து கையை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார். உடனே ரேவதி சத்தம் போடவே, வினோத்குமார் ரேவதியை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.
இது குறித்து ரேவதி பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், விசாரணை செய்யப்பட்டது. பழவந்தாங்கல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பந்தப்பட்ட வினோத்குமாரை பிடித்து விசாரணை செய்தபோது, வினோத்குமார் ரேவதியின் கையை பிடித்து இழுத்து தகராறு செய்து தாக்கியது தெரியவந்தது.
அதன்பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு பிரிவு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.
விசாரணையில் வினோத்குமார் ரேவதியின் உறவினர் என்பதும், ஏற்கனவே வினோத்குமார் கடந்த பிப்ரவரி மாதம் ரேவதியிடம் தகராறு செய்து, ரேவதியை தலையில் தாக்கி இரத்தக்காயம் ஏற்படுத்தியது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட வினோத்குமார், விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X