search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமத்துவ மக்கள் கட்சி கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    சமத்துவ மக்கள் கட்சி கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    ஜம்புநதி கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்- சமத்துவ மக்கள் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

    ஜம்புநதி கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கடையத்தில் நடந்த சமத்துவ மக்கள் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    கடையம்:

    கடையம் ஒன்றிய சமத்துவ மக்கள் கட்சி கூட்டம் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.

    கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார்.

    ஆலங்குளம் தொகுதி செயலாளர் ஜெயசந்திரபாண்டியன், கே.வி.கே.துரை, மகளிரணி அந்தோணியம்மாள், சுமதி, நகர செயலாளர்கள் ஜெயபாலன், ராஜபிரபு, ராஜகோபால், ஒன்றிய செயலாளர்கள் ராஜா, மோகன், ராஜ் இசக்கிமுத்து, ஜாய் சிங் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இத்திட்டத்தின் மூலம் மழை வளமில்லாமல் காணப்படும், பல ஏக்கர் விளை நிலங்கள் பயன் பெறும்.

    வறண்டு காணப்படும் பல குளங்கள் நிரம்புவதற்கு வழிவகுக்கும். மேலும் புங்கம்பட்டி, மயிலப்பபுரம், சின்குமார் பட்டி, வெங்கடாம்பட்டி, கோவிலூற்று, லெட்சுமி யூர், ஐந்தாங்கட்டளை பகுதியை சேர்ந்த விவசாபிகள் பயன் பெறுவர்.

    மேலும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு லாரிகள் மூலம் தினந்தோறும் கொண்டு செல்லப்படுவது வழக்கமாக உள்ளது.

    எனவே அரசு இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×