search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவள்ளூர் அருகே நர்சிடம் தகராறு- வாலிபர் கைது

    திருவள்ளூர் அருகே நர்சிடம் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் சுங்குவார்சத்திரத்தில் நர்சாக வேலைபார்த்து வருகிறார். இவர் தனது சகோதரி உடன் பேரம்பாக்கம் பஜார் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பேரம்பாக்கம் மேலாண்ட தெருவை சேர்ந்த அனந்தராமன் (27) என்பவர் மோட்டார் சைக்கிளை அவர்கள் மீது மோதுவது போல் வந்தார். இதனை நர்சு கண்டித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் நர்சை அவர், மானபங்கம் செய்தார். மேலும் இதனை தடுக்க வந்த நர்சின் தந்தையையும் தாக்கிவிட்டு மிரட்டல் விடுத்து தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்கு பதிவு செய்து அனந்தராமனை கைது செய்தனர்.
    Next Story
    ×