search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ராதாபுரத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை

    ராதாபுரத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    ராதாபுரம் அருகே உள்ள கோலியன்குளம் இந்திரா நகரை சேர்ந்தவர் முத்துக்கனி. இவரது மனைவி மாலா(வயது 38).

    இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் அறையில் இருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

    மாலாவை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×