என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பல்லடத்தில் பலத்த காற்றால் விழுந்த மரம்
Byமாலை மலர்16 April 2022 10:41 AM GMT (Updated: 16 April 2022 10:41 AM GMT)
மின் கம்பிகள் மீது மரம் விழுந்ததால் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
பல்லடம்:
பல்லடம் பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இடி மின்னலுடன் பெய்த மழையில் பனை மரம் தீப்பற்றி எரிந்தது. இந்த நிலையில் நேற்று மாலை காற்றுடன் மழை பெய்து வந்த நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனையில் இருந்த சுமார் 20 வயதுடைய பாதானி மரம், பலத்த காற்றால் ரோட்டில் சாய்ந்தது.
அதிர்ஷ்டவசமாக அந்த சமயம் போக்குவரத்து குறைவாக இருந்ததால் விபத்து ஏற்படவில்லை. மேலும் அந்தப் பகுதி அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் ஆகும். இரவு நேரமானதாலும் மழை பெய்து கொண்டிருந்ததாலும் அங்கு பொதுமக்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.
மின் கம்பிகள் மீது மரம் விழுந்ததால் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் சரி செய்து கொண்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X