என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தென்காசியை சேர்ந்த வலுதூக்கும் வீரர் ஆசியன் போட்டிக்கு தேர்வு
Byமாலை மலர்16 April 2022 9:42 AM GMT (Updated: 16 April 2022 9:42 AM GMT)
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வலுதூக்கும் வீரர் ஆசியன் போட்டிக்கு தேர்வு பெற்றார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள பாரத் ஜிம் செயல்பட்டு வருகிறது. இந்த ஜிம்மில் 100-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
தென்காசி மாவட்ட அளவில் ஆலங்குளத்தில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் பாரத் ஜிம் உரிமையாளரும் பயிற்சியாளருமான குத்தாலிங்கம் தலைமையிலான 60-க்கும் மேற்பட்ட வீரர்கள் அதிக புள்ளிகளைப் பெற்று தங்க கோப்பையும், சான்றிதழ்களையும் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து மாநில அளவில் சேலத்தில் நடைபெற்ற போட்டியில் பாரத் ஜிம் பயிற்சியாளர் குத்தாலிங்கம் ஆசியன் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து வீரர்களும் சக பயிற்சியாளர்களும் அவரை பாராட்டினர்.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வலுதூக்கும் போட்டியில் முதன்முதலாக ஆசியன் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X