என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Byமாலை மலர்16 April 2022 3:07 AM GMT (Updated: 16 April 2022 3:07 AM GMT)
மழையின் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.
கொடைக்கானல்:
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானல் பகுதியில் தற்போது குளுகுளு சீசன் தொடங்கி உள்ளது. 4 நாட்கள் தொடர் விடுமுறை நாளையொட்டி சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. நேற்று அதிகாலை முதலே சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். இதனால் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
டைகர் சோலை முதல் அப்சர்வேட்டரி வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். குறிப்பாக கொடைக்கானல் பஸ் நிலையத்தில் இருந்து கோக்கர்ஸ்வாக் செல்லும் லாயிட்ஸ் ரோடு பகுதியில் இருபுறமும் வாகனங்கள் சாலையை மறித்து நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் அந்த வழியாக காரைக்குடி நோக்கி சென்ற அரசு பஸ் செல்ல முடியாமல் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திய பிறகு அந்த பஸ் புறப்பட்டு சென்றது.
இதற்கிடையே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. தனியார் தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்தனர். மேலும் கொடைக்கானலில் நேற்று காலையில் வெப்பம் நிலவியது. தொடர்ந்து பிற்பகல் 3 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மாலை 6 மணி முதல் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. மோயர் பாயிண்ட் பகுதியில் மலையில் தவழ்ந்து சென்ற மேக கூட்டத்தை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மழையின் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானல் பகுதியில் தற்போது குளுகுளு சீசன் தொடங்கி உள்ளது. 4 நாட்கள் தொடர் விடுமுறை நாளையொட்டி சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. நேற்று அதிகாலை முதலே சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். இதனால் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
டைகர் சோலை முதல் அப்சர்வேட்டரி வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். குறிப்பாக கொடைக்கானல் பஸ் நிலையத்தில் இருந்து கோக்கர்ஸ்வாக் செல்லும் லாயிட்ஸ் ரோடு பகுதியில் இருபுறமும் வாகனங்கள் சாலையை மறித்து நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் அந்த வழியாக காரைக்குடி நோக்கி சென்ற அரசு பஸ் செல்ல முடியாமல் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திய பிறகு அந்த பஸ் புறப்பட்டு சென்றது.
இதற்கிடையே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. தனியார் தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்தனர். மேலும் கொடைக்கானலில் நேற்று காலையில் வெப்பம் நிலவியது. தொடர்ந்து பிற்பகல் 3 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மாலை 6 மணி முதல் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. மோயர் பாயிண்ட் பகுதியில் மலையில் தவழ்ந்து சென்ற மேக கூட்டத்தை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மழையின் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X