என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்
Byமாலை மலர்15 April 2022 10:30 AM GMT (Updated: 15 April 2022 10:30 AM GMT)
ராமேசுவரத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது.
ராமேசுவரம்
தமிழக கடலோர பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மீன் இனப்பெருக்கத்திற்காகவும் தமிழக அரசு ஆண்டுதோறும் ஏப்ரல் 15ந்தேதி முதல் ஜூன் 14ந்தேதி இரவு வரை 61நாட்கள் மீன்பிடிப்பதற்கு செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கும்.
இந்த 61 நாட்களில் மீனவர்கள் ராமேசுவரம் உட்பட தமிழகபகுதி முழுவதும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல மாட்டார்கள். இவர்கள் படகுகளை கடலில் பாதுகாப்பாக நிறுத்தி விடுவார்கள்.
மேலும் 61 நாட்களில் படகுகளில் பழுது நீக்கம் ªச்யவது, பராமரிப்பது போன்ற பணிகளையும் மீனவர்கள் செய்து வருவார்கள். ராமேசுவரம், மண்டபம், பாம்பன் ஆகிய கடலோர பகுதிகளில் இன்று முதல் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது.
இதையடுத்து இந்தபகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. படகுகளை கடலில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி சாதனங்களையும் வீடு களுக்கு எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டனர். சில மீனவர்கள் படகுகளை சீரமைக்கும் பணிக்காக கடலோர பகுதிகளில் படகு களை ஏற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று தடைக்காலம் தொடங்கியதை அடுத்து ராமேசுவரம் கடலோரபகுதியில் மீனவர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X