search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்பிடி தடைக்காலம்"

    • மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவோடு முடிவடைய உள்ளது.
    • மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ந் முதல் ஜூன் 14-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

    காசிமேடு :

    தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினகளின் இனப்பெருக்க காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. மீன் வளத்தை பெருக்கும் வகையில் இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் முதல் இந்த மாதம் 14-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

    இந்த தடையானது நாளை(புதன்கிழமை) நள்ளிரவோடு முடிவடைய உள்ளது. இதனால் கடலுக்குள் செல்ல காசிமேடு மீனவர்கள் தயாராகி வருகிறார்கள்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்குள் செல்ல தங்களது விசைப்படகுகளில் ஐஸ் ஏற்றுவது, வலைகளை பின்னி சரி செய்வது, டீசல் நிரப்புவது, உதிரி பாகங்களை பழுது பார்த்து சரிசெய்வது, தங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் குடிநீரை நிரப்புவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் வழக்கத்தைவிட பரபரப்பாக காணப்படுகிறது.

    • இந்திய வானிலை மைய அறிவிப்பு ராமேசுவரம் மீனவர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கவலையுடன் தெரிவித்தனர்.

    ராமேசுவரம்:

    தமிழக கடற்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    அதன்படி கடற்கரை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை வங்க கடலில் மீனவர்கள் மேற்கண்ட காலங்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவதில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடற்கரையில் இருந்து சில மைல் தூரத்தில் கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் வருகிற 14-ந்தேதி வரை 60 நாட்கள் மீன்பிடி தடை காலமாக அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விசைப்படகு மீனவர்கள் வேலை இழந்தனர். இந்த காலகட்டங்களில் தங்களது படகு, வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நாளை மறுநாள் (14-ந்தேதி) இரவு டன் மீன்பிடி தடை காலம் முடிவடைகிறது. 2 மாதம் தடை முடியும் நிலையில் ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். படகுகளில் டீசல் நிரப்புவது, ஐஸ் கட்டிகளை இருப்பு வைப்பது போன்றவற்றில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையில் அரபி கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த சில நாட்கள் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    புயல் சின்னம் காரண மாக வருகிற 14-ந்தேதி வரை ராமேசுவரம் மீன வர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த அறிவிப்பு ராமேசுவரம் மீனவர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    புயல் சின்னத்தால் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் மீன்பிடி தடைக் காலம் முடிந்து ராமேசுவரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மீன்பிடி தடை காலத்தில் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது. அரசு கொடுத்த நிவாரண உதவியும் போதவில்லை. எனவே வேறு வேலைக்கு சென்றோம். வருகிற 14-ந்தேதி முதல் கடலுக்கு செல்ல தயாராகி வந்த நிலையில் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கவலையுடன் தெரிவித்தனர்.

    • மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக அரசு நிவாரண உதவி வழங்குகிறது.
    • நிவாரணத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் பணி இன்று தொடங்கும்.

    சென்னை:

    தமிழகத்தில் கடல் மீன்வளத்தைப் பேணி காப்பதற்காக 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக அரசு நிவாரண உதவி வழங்குகிறது. அவ்வகையில், இந்த ஆண்டு 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணமாக தலா 5000 ரூபாய் வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்திற்காக ரூ.89.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 1.79 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன்பெறும். அரசு நிதி ஒதுக்கியதையடுத்து, மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் பணி இன்று தொடங்கும். 

    • ஆறு, ஏரி மற்றும் குளம் மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
    • மட்டன் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் இந்த மீன்களை வாங்கி செல்வதாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் மீன் பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும். அதன்படி நேற்று முதல் வருகிற ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன் பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன் எதிரொலியாக கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் மற்றும் துறைமுகம் பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு வரும் கடல் மீன்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

    இதன் காரணமாக கடல் மீன்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஆறு, ஏரி மற்றும் குளம் மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இந்நிலையில் கடலூர் செம்மண்டலம், சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை ஓரத்தில் கெண்டை மற்றும் வவ்வால் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. அப்போது ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றதை காண முடிந்தது.

    மேலும் கடல் மீன்களின் விலை உயர்ந்த காரணத்தினால் இந்த மீன்களை பொதுமக்கள் வாங்கி சென்றதோடு, தற்போது வெயில் காலம் என்பதால் சிக்கன் அதிகளவில் வாங்க விருப்பம் இல்லாத நிலையிலும், மட்டன் விலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் இந்த மீன்களை வாங்கி செல்வதாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக காலையிலிருந்து மீன்கள் வாங்குவதற்கு மக்கள் குவிந்திருந்ததை காணமுடிந்தது.

    • ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலான 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் ஆகும்.
    • விசைப்படகுகள், இழுவைப்படகுகள் கடலுக்குள் செல்லக்கூடாது.

    சென்னை :

    தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில்கொண்டு மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் குறிப்பிட்ட காலத்துக்குக் கடலில் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    அதன்படி, கிழக்குக்கடற்கரை எல்லையான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலும், மேற்குக்கடற்கரை எல்லையான கன்னியாகுமரி முதல் நீரோடி வரை ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரை (61 நாட்கள்) மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

    இந்தக் காலக்கட்டத்தில் பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு மீன்பிடி தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை கமிஷனர் கே.எஸ்.பழனிசாமி கூறியதாவது:-

    ஏப்ரல் 15-ந்தேதி (நாளை) முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலான 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் ஆகும். மேற்கண்ட காலத்தில் தமிழகக்கடலோரப் பகுதிகளில் இருந்து விசைப்படகுகள், இழுவைப்படகுகள் கடலுக்குள் செல்லக்கூடாது. எந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள் தமிழக எல்லையில் இருந்து ஆந்திர மாநில கடல்பகுதிக்கு செல்லக்கூடாது. தடையை மீறி மீன்பிடிக்கச்சென்று, அதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மீனவர் சங்கங்களே பொறுப்பேற்க வேண்டும்.

    மீன்பிடி தடைக்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புப்பலகைகளை அனைத்து மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்களிலும் நிறுவிடவேண்டும்.

    எனவே மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு முன்பாக, கடலுக்குச்சென்ற மீன்பிடி விசைப்படகுகள் 14-ந்தேதி (இன்று) இரவு 12 மணிக்குள் கட்டாயம் கரை திரும்பவேண்டும். ஆழ்கடல் பகுதிக்கு சென்றிருப்போருக்கு உரிய தகவல்கள் அளித்து கரை திரும்பிட ஏற்பாடு செய்திடவேண்டும்.

    மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்த பின்பு, அதாவது 14-ந்தேதி இரவு 12 மணிக்கு பிறகு கரைக்கு திரும்பும் மீன்பிடி விசைப்படகுகள் விவரங்கள் உடனடியாக தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்கப்படவேண்டும். கரைக்கு திரும்பாத படகுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தடைக்காலம் 31-ம் தேதியுடன் முடிகிறது
    • படகுகளில் ஐஸ்கட்டிகள் ஏற்றும் பணி தொடங்கியது

    கன்னியாகுமரி:

    மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது.

    குமரி மாவட்டத்தில் இந்த தடைக் காலம் 2 பருவ காலமாக உள்ளது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ம் தேதி முதல் ஜூன் 15 ம் தேதிவரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை பகுதிகளில் கடந்த ஜூன் 1-ம் தேதி தொடங்கி ஜூலை 31 -ம் தேதி (நாளை மறுநாள்) நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.

    குளச்சல் பகுதியில் சுமார் 300 விசைப்படகுகள் உள்ளன.இந்த தடைக்காலத்தில் விசைப்படகினர் தங்கள் படகுகளில் என்ஜின்களை பழுது பார்ப்பது, பெயிண்டு அடிப்பது, பேட்டரி மற்றும் ஓயரிங், வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஒரு விசைப்படகு ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும்.ஆழ்கடல் பகுதியில்தான் உயர் ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வர். குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் 31 ம் தேதி நள்ளிரவுடன் தடைக்காலம் நீங்குகிறது.தடை நீங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் விசைப்படகினர் படகுகளை பழுது பார்த்து, வலைகளை பின்னும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.தவிர மீன்பிடி உபகரணங்களையும் தயார் செய்து வருகின்றனர். தற்போது விசைப்படகுகளில் ஐஸ் ஏற்றும் பணிகளில் மீனவர்கள் ஈடுப்பட்டு உள்ளனர். நாளை மறுநாள் நள்ளிரவுடன் விசைப்படகுகளுக்கு தடை நீங்குவதால் விசைப்படகினர், மீன் சுமக்கும் தொழிலாளர்கள் மற்றும் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

    • மீன்களின் இனப்பெருக்க காலத்தில் விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்படும்.
    • மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15 முதல் விசைப்படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்தனர். இந்த தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணியுடன் தடைக்காலம் முடிவுற உள்ளது. இதனையடுத்து மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். மீன் பிடிக்க தேவையான வலை போன்ற உபகரணங்களை படகுகளில் ஏற்றும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • தடை காலத்தையொட்டி தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
    • மீன்பிடி தடை காரணமாக அனைத்து விசைப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் 240 விசைப்படகுகள் உள்ளன.

    தூத்துக்குடி:

    இந்தியாவில் கடல் வளம், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலங்களில் மீன்கள் இனப்பெருக்கம் நடைபெறும்.

    இந்த காலங்களில் விசைப்படகு மற்றும் இழுவை படகுகள் மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. நாட்டு படகு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே சென்று மீன் பிடிப்பதால் அவர்களுக்கு இந்த தடைகாலம் பொருந்தாது. வழக்கம் போல் அவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவார்கள்.

    தடை காலத்தையொட்டி தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம், வேம்பார், தாளமுத்து நகர், வெள்ளப்பட்டி, திரேஸ்புரம், இனிகோ நகர், தெர்மல் நகர், புன்னைக்காயல், மணப்பாடு, பெரியதாழை உள்பட மாவட்டம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் சுமார் 10 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.

    மீன்பிடி தடை காரணமாக அனைத்து விசைப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் 240 விசைப்படகுகள் உள்ளன.

    தடை காலத்தையொட்டி தூத்துக்குடியில் உள்ள விசைப்படகுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்யும் பணியிலும், தேசம் அடைந்த மீன்வலைகளை மீண்டும் பின்னும் பணியிலும் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் 61 நாட்கள் தடைகாலம் நாளையுடன் முடிவடைகிறது. நாளை நள்ளிரவு முதல் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க புறப்பட்டு செல்ல இருக்கின்றனர். அதற்கான முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆழ்கடலுக்கு செல்ல தேவையான டீசல், ஜஸ் உள்ளிட்ட பொருட்களை படகுகளில் ஏற்ற தயாராகி வருகின்றனர்.

    • கடந்த 61 நாட்களாக காசிமேடு மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லாததால் மீன்வரத்து குறைவாகவே காணப்பட்டது.
    • நாளை நள்ளிரவு செல்லும் பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் வருகிற ஞாயிற்றுக்கிழமை கரை திரும்புவார்கள்.

    ராயபுரம்:

    தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் ஆண்டுதோறும் இருந்து வருகிறது.

    இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் நாளையுடன் (14-ந்தேதி) முடிவடைகிறது.

    இதைத்தொடர்ந்து ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தயாராகி வருகிறார்கள்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், 800-க்கும் மேற்பட்ட பைபர்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மீன்பிடி தடைகாலத்தையொட்டி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

    அவர்கள் தங்களது படகுகளை சரிபார்ப்பது, வர்ணம் பூசுவது, வலைகளை சரி பார்ப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே மீன்பிடி தடைகாலம் நாளையுடன் முடிவதால் நாளை நள்ளிரவு முதல் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பெரும்பாலான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல உள்ளனர்.

    ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் ஒரு வாரம் முதல் 15 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன் பிடித்து வருவது வழக்கம். இதனால் மீனவர்கள் தங்களுக்கு தேவையான டீசல், ஐஸ் கட்டிகள், ரேஷன் பொருட்கள், தண்ணீர் கேன்கள் உள்ளிட்டவற்றை விசைப்படகுகளில் ஏற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    கடந்த 61 நாட்களாக காசிமேடு மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லாததால் மீன்வரத்து குறைவாகவே காணப்பட்டது. இதனால் மீன்களின் விலை அதிகமாக இருந்தது.

    நாளை நள்ளிரவு செல்லும் பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் வருகிற ஞாயிற்றுக்கிழமை கரை திரும்புவார்கள். எனவே அடுத்த வாரம் முதல் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் என்றும் மீன் விலையும் குறையும் என்று அசைவ பிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம், வேம்பார், தாளமுத்து நகர், வெள்ளப்பட்டி, திரேஸ்புரம், இனிகோ நகர், தெர்மல் நகர், புன்னைக் காயல், மணப்பாடு, பெரிய தாழை உள்பட மாவட்டம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகு கள் மூலம் சுமார் 10 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தயாராகி வருகிறார்கள்.

    மீனவர்கள் நாளை நள்ளிரவு மீன்பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர். அதன்படி தொண்டி, ராமேசுவரம், மண்டபம், பாம்பன், கீழக்கரை, பெரியபட்டினம், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள ஆயிரக் கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்வ தற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் இந்திய கடலில் கிழக்கு, மேற்கு கடற்கரை பகுதியில் தலா 60 நாட்கள் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்து வருகிறது.
    • நாளை நள்ளிரவுடன் மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.

    ராமேசுவரம்:

    மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் இந்திய கடலில் கிழக்கு, மேற்கு கடற்கரை பகுதியில் தலா 60 நாட்கள் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்து வருகிறது.

    அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்தது. கிழக்கு கடற்கரையில் உள்ள தமிழக பகுதிகளான ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், சென்னை, திருவள்ளூர் உள்பட கடலோரப் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இதன் காரணமாக கடலுக்கு செல்லவில்லை.

    தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன. 60 நாட்கள் தடை காலம் விதிக்கப்பட்டதால் மீனவர்கள் பலர் மாற்று வேலைக்கு சென்றனர்.

    சிலர் நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்க சென்று வந்தனர். இந்த தடை காலங்களில் மீனவர்கள் தங்களது படகுகளில் ஏற்பட்டிருக்கும் பழுதுகளை சரி செய்யவும், வர்ணம் பூசவும், வலைகளை பராமரிக்கவும், விசைப்படகு எஞ்சின்களை பழுது நீக்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் நாளை (14-ந் தேதி) நள்ளிரவுடன் மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். நேற்று முதல் மீனவர்கள் தங்களது படகுகளை தயார் நிலையில் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மீன்பிடிக்கச் செல்ல தேவையான வலை, மீன்பிடி சாதனங்களை படகுகளில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    கடற்கரை மாவட்டமான ராமநாதபுரத்தில் மீனவர்கள் நாளை நள்ளிரவு மீன்பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர். அதன்படி தொண்டி, ராமேசுவரம், மண்டபம், பாம்பன், கீழக்கரை, பெரியபட்டினம், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஆழ்கடலுக்கு செல்ல தேவையான டீசல், ஐஸ், குடிநீர், உணவு பொருட்கள் ஆகியவற்றை படகுகளில் ஏற்றி வருகின்றனர்.

    இதுகுறித்து ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கூறுகையில், கடந்த 2 மாதமாக மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டதால் கடலுக்கு செல்ல முடியவில்லை. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது அரசு கொடுக்கும் உதவித்தொகையும் போதிய அளவில் இல்லை. 2 மாதம் வருமானத்திற்காக மாற்று வேலைக்கு சென்று வந்தோம்.

    இந்த நிலையில் தடை காலம் முடிந்து நாளை நள்ளிரவு முதல் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட உள்ளது. கடலுக்கு செல்ல ஆர்வமாக உள்ளோம். ஆனாலும் வழக்கம்போல் இலங்கை கடற்படை எங்களை மீன்பிடிக்க செய்யவிடாமல் விரட்டியடிக்கும் என்ற அச்சமும் உள்ளது என தெரிவித்தனர்.

    நாளை மறுநாள் தடை காலம் முடிய உள்ள நிலையில் மீனவர்கள் கடலுக்குச் செல்லும் ஆயத்த பணியில் ஈடுபட்டு வந்தனர். ராமேசுவரம் துறைமுகத்தில் இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. இந்த நிலையில் இன்று காலை ராமேசுவரம் துறைமுக கடற்கரை திடீரென 100 மீட்டர் தூரம் உள்வாங்கியது.

    இதனால் விசைப்படகுகள் தரை முட்டி நின்றது. கரையில் இருந்து படகுகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல சிறிய வல்லத்தை மீனவர்கள் பயன்படுத்துவார்கள். இன்று காலை மீனவர்கள் விசைப் படகுகளுக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் போது கடல் உள்வாங்கியதால் பணிகள் பாதிக்கப்பட்டது.

    இதனால் மீனவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். சில மணி நேரத்திற்கு பின் மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன்பின் மீனவர்கள் விசைப்படகில் தேவையான பொருட்களை ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    ×