என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லை விவசாயிகளுடன் முதல்-அமைச்சர் நாளை கலந்துரையாடுகிறார்
Byமாலை மலர்15 April 2022 10:16 AM GMT (Updated: 15 April 2022 10:16 AM GMT)
இலவச மின்சாரம் பெற்ற நெல்லை மாவட்ட விவசாயிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்துகிறார்.
நெல்லை:
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக தமிழகம் முழுவதும் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு மின்இணைப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் மின்இணைப்பு பெற்ற ஒரு லட்சம் விவசாயிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நாளை (சனிக்கிழமை) கலந்துரையாடுகிறார்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இலவச மின்சாரம் பெற்ற விவசாயிகள் முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக வண்ணார்பேட்டை எப்.எக்ஸ்.பொறியியல் கல்லூரி, தென்காசி ஸ்ரீநல்லமணி யாதவா கல்லூரி மற்றும் சீதபற்பநல்லூர், வள்ளியூர், புளியங்குடி உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லூரிகளிலும் ஏற்பாடுகள் செய்யப்-பட்டுள்ளது.
வண்ணார்பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்குகிறார். கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகிக்கிறார். நிகழ்ச்சியில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மின்சாரதுறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக தமிழகம் முழுவதும் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு மின்இணைப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் மின்இணைப்பு பெற்ற ஒரு லட்சம் விவசாயிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நாளை (சனிக்கிழமை) கலந்துரையாடுகிறார்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இலவச மின்சாரம் பெற்ற விவசாயிகள் முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக வண்ணார்பேட்டை எப்.எக்ஸ்.பொறியியல் கல்லூரி, தென்காசி ஸ்ரீநல்லமணி யாதவா கல்லூரி மற்றும் சீதபற்பநல்லூர், வள்ளியூர், புளியங்குடி உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லூரிகளிலும் ஏற்பாடுகள் செய்யப்-பட்டுள்ளது.
வண்ணார்பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்குகிறார். கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகிக்கிறார். நிகழ்ச்சியில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மின்சாரதுறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X