என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரூ.5 கோடிக்கு மது விற்பனை
Byமாலை மலர்15 April 2022 9:15 AM GMT (Updated: 15 April 2022 9:15 AM GMT)
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு மது விற்பனையானது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் 189 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இங்கு நாள்தோறும் ரூ.1.5 கோடிக்கு மது விற்பனையாவது வழக்கம்.
மேலும் தீபாவளி, பொங்கல், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட விஷேச நாட்களிலும், டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் நாட்களுக்கு முந்தைய நாட்களிலும் வழக்கத்தைவிட மதுபானங்களின் விற்பனை அதிகரிப்பது வழக்கம்.
இதனிடையே நேற்று மகாவீர் ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகளை அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன. ஆனால் நேற்று முன்தினமே மதுப்பிரியர்கள் அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைத்தனர்.
இதனால் நேற்று முன்தினம் ஒரே நாளில் வழக்கத்தைவிட அதிகமாக மதுபானங்கள் விற்பனையானது. அதன்படி ரூ.5 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X