search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    வேலைபார்த்த கம்பெனியில் காப்பர் கம்பி திருடிய 2 பேர் கைது

    பொன்னேரி அருகே வேலைபார்த்த கம்பெனியில் 1 லட்சம் மதிப்புள்ள காப்பர் கம்பியை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த மெதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (59) இவர் மெதூரில் மின் சாதனங்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார் நேற்று முன்தினம் கம்பெனியில் மின் சாதனங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் காப்பர் கம்பி திருடு போயிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சுப்பிரமணி பொன்னேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது கம்பெனியில் வேலை பார்த்த சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த மோகன் (55) பொன்னேரி அடுத்த காஞ்சிவாயல் காந்திநகர் பகுதியை சேர்ந்த தங்கவேல் (35) ஆகிய இருவரும் கம்பெனியில் மின்சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தும் காப்பர் கம்பி 50 கிலோ திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு 1 லட்சம் ஆகும். காப்பர் கம்பிகளை திருடிய இருவரையும் கைது செய்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×