search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபர் கைது

    பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் உள்ள ராயர்பாளையம் குட்டை பகுதியில் சீட்டாட்டம் நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பருவாய் - இடையர்பாளையம் ரோட்டில் உள்ள குட்டை பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் அங்கு விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வைத்திருந்த கோவை மாவட்டம் சூலூர் தாலுகா இடையர்பாளையத்தை சேர்ந்த கார்த்திக்(32) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 3 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் உள்ள ராயர்பாளையம் குட்டை பகுதியில் சீட்டாட்டம் நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். 

    அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வன், வினோத்,கிருஷ்ணமூர்த்தி, செல்லமுத்து ஆகிய 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள், ரொக்கம் ரூ.13,350 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×