என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் போலீஸ் லைன் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் திருவிழா
Byமாலை மலர்12 April 2022 7:15 AM GMT (Updated: 12 April 2022 7:15 AM GMT)
விழாவின் தொடர்ச்சியாக நொய்யல் ஆறு கருப்பண்ண விநாயகர் கோவிலில் இருந்து அம்மன் கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது.
திருப்பூர்;
திருப்பூர் கோர்ட்டு வீதியில் உள்ள போலீஸ் லைன் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் பல்வேறு வகை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் அம்மனுக்கு ஏராளமான ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வந்து தரிசனம் செய்தனர். விழாவின் தொடர்ச்சியாக நொய்யல் ஆறு கருப்பண்ண விநாயகர் கோவிலில் இருந்து அம்மன் கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது.
இதேபோல் இன்று இரவு 8 மணிக்கு அம்மன் அழைத்தல், நாளை 13-ந் தேதி காலை பொங்கல் மாவிளக்கு, இரவு ஆர்கெஸ்ட்ரா, 14-ந்தேதி இரவு 7 மணிக்கு கண்ணாடி பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, 15-ந் தேதி மகா அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடக்கிறது. 17-ந் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X