search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈவிகேஎஸ் இளங்கோவன்
    X
    ஈவிகேஎஸ் இளங்கோவன்

    ஜெயலலிதா குறித்து அவதூறுப் பேச்சு: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீதான வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்டு

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீதான வழக்கை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
    சென்னை: 

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இவர் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது, தமிழ்நாடு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா குறித்து, சில கருத்துக்களை இளங்கோவன் தெரிவித்தார்.

    ஜெயலலிதா

    இதுகுறித்து, அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில், இளங்கோவன் தரப்பில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசவில்லை என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுதாரர் இளங்கோவன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×