search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரத்தில் பெய்த கனமழையால் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்ற பஸ்
    X
    ஒட்டன்சத்திரத்தில் பெய்த கனமழையால் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்ற பஸ்

    ஒட்டன்சத்திரத்தை குளிர்வித்த கோடை மழை

    ஒட்டன்சத்திரத்தில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது
    ஒட்டன்சத்திரம்:

    கோடை காலம் தொடங்கியதில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதியில் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இதனால் சிறுவர்கள், முதியவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

    வெயிலை சமாளிக்க பழச்சாறு, மோர், இளநீர்-ஆகியவற்றை  பருகிவந்தனர். நேற்று பகல் பொழுதில் கடுமையான வெப்பம் நிலவியது.

    மாலை நேரத்தில் கரும் மேகங்கள் சூழ்ந்து திடீரென சாரலாக தொடங்கி கனமழை பெய்தது. இதேபோல் சத்திரப்பட்டியிலும் 1 மணிநேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.

    இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்ப-தாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே மழை தொடர்ந்து பெய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    Next Story
    ×