search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    சேலம் பொன்னம்மாப்பேட்டையில் 2 டன் கடத்தல் ரேசன் அரிசி சிக்கியது- 2 பேர் கைது

    சேலம் பொன்னம்மாப்பேட்டையில் 2 டன் கடத்தல் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
    சேலம்:

    சேலம் பொன்னம்மாப்பேட்டை வாட்டர் டேங்க் பகுதியில் இன்று அதிகாலை ரேசன் அரிசி மூட்டைகளுடன் நீண்ட நேரமாக ஒரு வாகனம் நிற்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அதனை சோதனை செய்தனர். அப்போது 40 கிலோ எடை கொண்ட 50 மூட்டைகளில் ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது.

    வாகனத்தில் இருந்த பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 33), நெத்திமேட்டை சேர்ந்த சந்தோஷ்குமார் (34) ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது ரேசன் அரிசியை கடத்தி வந்து மாவாக அரைக்க முயன்றதும், பின்னர் அதனை ஓட்டல்களுக்கு சப்ளை செய்ய முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் 2 டன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×