search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன் அரிசி கடத்தல்"

    • விடையூர் பகுதியில் வேனில் கடத்தி வந்த ஒரு டன் ரேசன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • வேனில் இருந்த ஒருவரை போலீசார் கைது செய்து ரேசன் அரிசியையும் வேனையும் பறிமுதல் செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அருகே விடையூர் பகுதியில் வேனில் கடத்தி வந்த ஒரு டன் ரேசன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து வேனில் இருந்த ஒருவரை போலீசார் கைது செய்து ரேசன் அரிசியையும் வேனையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பொன்னேரி அருகே கிளிக்கொடி கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் பின்புறம் கேட்பாரற்று கிடந்த ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 

    • கடந்த ஒரு மாதத்தில் ஈரோடு சரகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • கோர்ட்டு விசாரணையில் உள்ள வழக்குகளில் 20 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குனர் வன்னியப்பெருமாளின் உத்தரவின்பேரில், கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மற்றும் ஈரோடு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    அதன்படி ஈரோடு சரகத்துக்கு உள்பட்ட ஈரோடு, திருப்பூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க தொடர்ந்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் ஈரோடு சரகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தொடர்புடைய 83 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 23 டன் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் 10-ம், 3 சக்கர வாகனம் ஒன்றும், 4 சக்கர வாகனங்கள் 6-ம் என மொத்தம் 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    மேலும் அரசு மானியத்தால் வழங்கப்பட்ட வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கோர்ட்டு விசாரணையில் உள்ள வழக்குகளில் 20 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளில் ஆஜராகாத 10 பேர் மீது பிடியாணை நிறைவேற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

    மேலும் ஈரோடு சரகத்துக்கு உள்பட்ட தமிழகம்-கர்நாடகா மாநில எல்லையான தாளவாடி, ஆசனூர், பர்கூர், கடம்பூர் மற்றும் தமிழக-கேரளா மாநில எல்லை பகுதியான உடுமலைப்பேட்டை அமராவதி நகர் ஆகிய சோதனை சாவடிகளிலும் இரவு, பகலாக போலீசார் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறார்கள்.

    மாதம் தோறும் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்துள்ளார்.

    • தாசில்தாரின் ஜீப்பில் ஜி.பி.எஸ். கருவி ஒன்று பொருத்தப்பட்டிருந்தது.
    • ரேஷன் அரிசி நூதன முறையில் கடத்திய நபரும், அதற்கு உடந்தையாக இருந்த ஜீப் டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும்படை தாசில்தாராக பணியாற்றி வருபவர் இளங்கோ.

    இவர் தலைமையிலான குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தி ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து வருகிறார்கள். மேலும் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடித்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இந்த தாசில்தார் இளங்கோ பயன்படுத்தி வரும் அரசு ஜீப்பில் டிரைவராக கிருஷ்ணகிரியை அடுத்த பி.சி.புதூரை சேர்ந்த சுப்பிரமணி (59) என்பவர் பணியாற்றி வந்தார்.

    ஆரம்பத்தில் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, கலெக்டரின் டிரைவராக பணியாற்றினார். அதன் பிறகு இவர் பணி மாறுதலில் பறக்கும் படை தாசில்தார் இளங்கோவின் ஜீப் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் தாசில்தாரின் ஜீப்பில் ஜி.பி.எஸ். கருவி ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. இதை கவனித்த அவர், இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பந்தப்பட்ட தாசில்தாரின் டிரைவர் சுப்பிரமணியை பணிமாறுதல் செய்து கிருஷ்ணகிரி தாசில்தார் ஜீப்பின் டிரைவராக நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், ஜி.பி.எஸ். கருவியை ரேஷன்அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த குருபரப்பள்ளி அருகே உள்ள நடுசாலையை சேர்ந்த தேவராஜ் (33) என்பவர் பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கருவி தேவராஜின் செல்போன் எண்ணுடன் இணைப்பில் இருந்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து தேவராஜை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் தான் ரேஷன் அரிசி கடத்தலுக்காக ஜி.பி.எஸ். கருவியை பறக்கும் படை தாசில்தாரின் ஜீப் டிரைவராக இருந்த சுப்பிரமணியிடம் வழங்கியதாகவும், அதை அவர் தான் ஜீப்பில் பொருத்தி எனக்கு உதவி செய்தார் என்றும் கூறினார்.

    இதையடுத்து ஜீப் டிரைவர் சுப்பிரமணியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அரிசி கடத்தல் மன்னன் தேவராஜ் கூறியவை உண்மை என தெரிய வந்தது. இதை தொடர்ந்து ஜி.பி.எஸ். கருவி வாங்கி தாசில்தாரின் ஜீப்பில் பொருத்தி ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த தேவராஜ், உடந்தையாக இருந்த தாசில்தாரின் ஜீப் டிரைவர் சுப்பிரமணி ஆகிய 2 பேரையும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வகிறார்கள்.

    கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க செல்லும் பறக்கும் படை தாசில்தாரின் ஜீப்பிலேயே ஜி.பி.எஸ். கருவியை பொருத்தி, வாகனத்தை கண்காணித்து, ரேஷன் அரிசி நூதன முறையில் கடத்திய நபரும், அதற்கு உடந்தையாக இருந்த ஜீப் டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • ரேசன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    சென்னை, எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை டி.எஸ்.பி சம்பத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப் - இன்ஸ்பெக்டர் ராஜா பாரதிதாசன் தலைமையிலான போலீசார் ஜாபர்கான் பேட்டை காசி தியேட்டர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஏராளமான ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கொடுங்கையூரை சேர்ந்த கமல்கிஷோர் (26), வியாசர்பாடியை சேர்ந்த மணி கண்டன் (23) ஆகிய 2பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது உணவுப் பொருள்கள் பதுக்கல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தேனியில் இருந்து மதுரைக்கு கடத்தப்பட இருந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட லாரியின் பதிவு எண் செங்கல்பட்டு மாவட்ட எண்ணாக இருப்பதால் அதன் உண்மைத் தன்மையையும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை ரோட்டில் பறக்கும்படை தனி தாசில்தார் முத்துக்குமார் தலைமையிலான குழுவினர் கடந்த 30-ந் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

    அந்த லாரியில் 3 டன் அளவில் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தேனியில் இருந்து மதுரைக்கு கடத்தப்பட இருந்த அந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவத்தின் போது லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரது செல்போனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் பதிவான அழைப்புகளை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட தேனியைச் சேர்ந்த ஒச்சு, லாரி டிரைவர், லோடு மேன் பீமன், நுகர்பொருள் வாணிப கழக இளநிலை தர நிர்ணய ஆய்வாளர் தமிழ்செல்வன், எழுத்தர் சுரேஷ் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட வழங்கல் அலுவலர் இந்துமதி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் செந்தில்குமார் முன்னிலையில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை கலெக்டருக்கு அளித்தனர்.

    அந்த அறிக்கையில் குடோன் இறநிலை தரஆய்வாளர் தமிழ்செல்வன், பட்டியல் எழுத்தர்கள் சுரேஷ், சதாசிவம் ஆகியோர் ஒச்சு, டிரைவரை பலமுறை செல்போனில் அழைத்து பேசியுள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கலெக்டர் ஷஜீவனா பரிந்துரையின் பேரில் தமிழ்செல்வம், சுரேஷ், சதாசிவம் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து மண்டல முதுநிலை மேலாளர் உத்தரவிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட லாரியின் பதிவு எண் செங்கல்பட்டு மாவட்ட எண்ணாக இருப்பதால் அதன் உண்மைத் தன்மையையும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • 1200 கிலோ ரேசன் அரிசியுடன் 2 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
    • ரேசன் அரிசி கடத்தல் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மணலி புதுநகர் அருகே உள்ள கடப்பாக்கம் பகுதியில் சாலையோரம் ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் கடந்த 2 நாட்களாக கேட்பாரற்று நின்றது. இதுபற்றி அறிந்ததும் மணலி போலீஸ் உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கல்யாணசுந்தரம், பபிதா ஆகியோர் லாரிகளில் மூட்டைகளாக ரேசன் அரிசி இருப்பது தெரிந்தது.

    மர்ம நபர்கள் ரேசன் அரிசி கடத்தி வந்துவிட்டு போலீசாரின் சோதனைக்கு பயந்து வேன்களை இங்கு நிறுத்தி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. 1200 கிலோ ரேசன் அரிசியுடன் 2 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. ரேசன் அரிசி கடத்தல் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நேற்று இரவு லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்
    • அவர் வைத்திருந்த பையில் சோதனை நடத்திய போது 200 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.

    கூடலூர்:

    தமிழகத்தில் இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசியை கேரளாவிற்கு விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டம், கம்பம், கூடலூர், சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி நேற்று இரவு லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்தார். அவர் வைத்திருந்த பையில் சோதனை நடத்திய போது 200 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதனை கடத்தி வந்த லோயர்கேம்ப் எல்.எப். ரோடு பகுதியை சேர்ந்த ராஜா (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த ரேசன் அரிசி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸபெக்டர் சுப்புலட்சுமியிடம் தகவல் தெரிவித்து ரேசன் அரிசி கடத்திய நபரையும் ஒப்படைத்தனர்.

    • போலீசார் உடனடியாக லாரிகளை சோதனை செய்ததில் 7 டன் 950 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை ஸ்ரீபெரும்புதூர் நுகர் பொருள் வழங்கல் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் துறை தலைவர் காமினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சென்னை மண்டல பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் சினேக பிரியா உத்தரவுப்படி, காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் போலீசார் மற்றும் காஞ்சிபுரம் சிறப்பு தாசில்தார் இந்துமதி ஆகியோர் இணைந்து காஞ்சிபுரம் அருகே கீழம்பி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வெளிமாநிலத்துக்கு கடத்துவதற்காக காஞ்சிபுரம் - வேலூர் சாலை கீழம்பி என்ற இடத்தில் 2 பேர் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    போலீசார் உடனடியாக லாரிகளை சோதனை செய்ததில் 7 டன் 950 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை ஸ்ரீபெரும்புதூர் நுகர் பொருள் வழங்கல் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    இது சம்பந்தமாக தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில், காஞ்சிபுரம் வெள்ளை கேட் அருகே நின்றுகொண்டு இருந்த சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்த முரளி (31), கரண் (24) ஆகியோரை இன்ஸ்பெக்டர் சசிகலா கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ரேசன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • ரேசன் அரிசி கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி கிராமத்தில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஞ்சிபுரம் குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தபோது அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியில் 216 மூட்டை ரேசன் அரிசி கடத்தி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.அதனை பறிமுதல் செய்தனர்.

    ரேசன் அரிசி கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • மினி ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • ஆட்டோவுடன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், சக்திவேலை கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தர்மபுரி சாலையில் நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த, மினி ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் தலா, 50 கிலோவில், 14 மூட்டைகளில், 700 கிலோ அரிசி இருந்தது. விசாரணையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா செட்டி அல்லி அடுத்த கம்மாளப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது45), என்பதும் தெரியவந்தது.

    அவர் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு வாங்கி, அதை கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து ஆட்டோவுடன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், சக்திவேலை கைது செய்தனர்.

    • 75 மூட்டைகளில் 3 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து உச்சிமாகாளியை கைது செய்தனர்.
    • தலைமறைவாக உள்ள முருகன் மற்றும் ஈஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு-கோவில்பட்டி சாலையில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆல்பின் பிரிட்ஜ் மேரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் தலைமையில் போலீசார் கந்தசுப்பிரமணியன்:-

    பூலையா நாகராஜன் உள்ளிட்டோர் கயத்தாறு-கோவில்பட்டி பைபாஸ் சாலையில் சவலாப்பேரி ஊருக்கு மேற்கு பகுதியில் ஹரிஹரன் என்பவர் தோட்டத்தில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்த வெள்ளானகோட்டை கீழத்தெருவை சேர்ந்த உச்சிமாகாளி(வயது 40) என்பவரை பிடித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து அரிசி மூட்டைகளை அவர்கள் சோதனை செய்தனர். அப்போது 40 கிலோ எடை கொண்ட 75 மூட்டைகளில் 3 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து உச்சிமாகாளியை கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருமங்கலக்குறிச்சியை சேர்ந்த முருகன் என்பவர் ஏற்பாட்டில் உச்சிமாகாளி மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் சேர்ந்து 3 டன் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை கேரளா மாநிலத்துக்கு கடத்துவதற்காக தோட்டத்தில் பதுக்கி வைத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து தலைமறைவாக உள்ள முருகன் மற்றும் ஈஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜன், செந்தட்டி அய்யன் ஆகியோர் புதூர் பாண்டியாபுரம் விலக்கு பாலம் அருகே சந்தேகப்படும்படியாக வந்த வானத்தை சோதனை செய்தபோது அதில் 30 மூட்டைகளில் 900 கிலோ ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அந்த மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், வேனை ஓட்டி வந்த தூத்துக்குடி பி அன்ட் டி காலனியை சேர்ந்த காந்திசங்கரை கைது செய்தனர்.

    தொடர்ந்து தூத்துக்குடி அண்ணா நகர் 9-வது தெருவை சேர்ந்த அஜித்குமாருடன் சேர்ந்து பன்றி பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அஜித்குமாரை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினர் தேடி வருகின்றனர்.

    • பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள பொது விநியோகத் திட்ட பொருள்களைக் கடத்துவதும், பதுக்குவதும் குற்றமாகும்.
    • குற்றத்தைச் செய்யும் நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

    சென்னை:

    உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் வி.ராஜாராமன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள பொது விநியோகத் திட்ட பொருள்களைக் கடத்துவதும், பதுக்குவதும் குற்றமாகும். இந்தக் குற்றத்தைச் செய்யும் நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

    இந்த நிலையில், பொது விநியோகத் திட்டப் பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல் தொடர்பான புகார்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×