search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    தமிழக ஊரக வளர்ச்சி துறை மணிமேகலை விருது வழங்குவதற்கு ரூ.2.08 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மணிமேகலை விருது தேர்விற்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவை விருதிற்காக தேர்வு செய்யும் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

    எனவே 2021-22ம் ஆண்டிற்கான விருதிற்கு தகுதியான மேற்கண்ட சமுதாய அமைப்பு களிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    மணிமேகலை விருதுக்கான முன்மொழிவுகளை திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), இரண்டாம் தளம், அறை எண்.207, மாவட்ட கலெக்டர் அலுவலகம், சேலம்- 636001 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை வருகிற 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர், அதில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×