search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    தமிழகத்தில் இன்று 35 பேருக்கு கொரோனா- 27 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை

    அரியலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி மற்றும் திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் கொரோனா சிகிச்சையில் ஒருவரும் இல்லை.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 35 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 647 ஆக உள்ளது. 

    சென்னையில் இன்று 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 27 மாவட்டங்களில் புதிய தொற்று பதிவாகவில்லை. மற்ற மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
     
    இன்று ஒரே நாளில் 63 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 204 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025 ஆக நீடிக்கிறது. மாநிலம் முழுவதும் 418 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரியலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி மற்றும் திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் கொரோனா சிகிச்சையில் ஒருவரும் இல்லை.
    Next Story
    ×