search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பாளை, மேலப்பாளையம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

    பாளை, மேலப்பாளையம் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் மின்தடை இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    நெல்லை:

    நெல்லை நகர்ப்புற மின்வினியோக செயற் பொறியாளர் முத்துக் குட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப் பதாவது:-

    பாளை துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் இங்கிருந்து மின்வினியோகம் நடைபெறும் வி.எம்.சத்திரம், கட்டபொம்மன்நகர், கிருஷ்ணாபுரம், செய்துங் கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, சாந்திநகர், சமாதானபுரம், பாளை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திருமலைக் கொழுந்துபுரம், மணப்படை வீடு, கீழநத்தம், பாளை பேருந்து நிலையம், தியாகராஜநகர், மகாராஜநகர், சிவந்திபட்டி, அன்புநகர், முருகன்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இதேபோல் மேலப் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    அன்றைய தினம் இங்கிருந்து மின்வினியோகம் மேலப்பாளையம் கொட்டி குளம் பஜார், அம்பை மெயின் ரோடு, குலவணிகர்புரம் மத்திய சிறைசாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஆமீன்புரம், மேலக் கருங்குளம், முன்னீர்பள்ளம், தருவை, ஓமநல்லூர், தெற்கு பைபாஸ்ரோடு, மேலகுலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், கணேசபுரம், பெருமாள்புரம், பொதிகைநகர், ரெட்டியார் பட்டி, புதிய பேருந்து நிலையம், டக்கம்ரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான்குளம், செங்குளம், இட்டேரி, புதுக்குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
    Next Story
    ×