search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பாளையில் ஓய்வுபெற்ற ராணுவவீரர் திடீர் சாவு

    பாளையில் ஓய்வுபெற்ற ராணுவவீரர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
    நெல்லை:

     பாளை ராஜாகுடியிருப்பை சேர்ந்தவர் ராஜபலவேசம் (வயது 57). ஓய்வு பெற்ற ராணுவவீரர்.

    தற்போது புள்ளியியல்துறையில் அரசு டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று பங்குனி உத்தரத்தையொட்டி ராஜபலவேசம் குலதெய்வம் கோவிலுக்கு சென்றார்.

    பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்த அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×