search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    மேச்சேரி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் பலி

    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேட்டூர்:

    சேலம் திப்புசுல்தான் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் அமீர். இவரது மனைவி ரேஷ்மா. இவர்களுக்கு 5 வயதில் இப்ராஹிம் என்ற மகன் உள்ளான்.

    இந்த நிலையில் ரேஷ்மா தனது மகனை அழைத்துக் கொண்டு மேச்சேரி அருகே உள்ள சிந்தாமணியூர் வசிக்கும் தனது மாமியார் வீட்டுக்கு சென்றனர். அங்கு விளையாடிக் கொண்டிருந்த இப்ராஹீமை காணவில்லை.

    ரேஷ்மா பல இடங்களில் தேடி பார்த்த போது அவர் வீட்டின் அருகே உள்ள ஏழுமலை என்பவரின் வீட்டில் உள்ள நிலம் பட்ட தண்ணீர் தொட்டியில் தனது மகன் தண்ணீரில் மூழ்கி கிடப்பது தெரிய வந்தது. உடனே இப்ராஹீமை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

    அவனை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இப்ராஹிம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேச்சேரி போலீசில் ரேஷ்மா புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×