search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் நகராட்சி பகுதிகளில் சேர்மன் உமாமகேஸ்வரி ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்த காட்சி.
    X
    சங்கரன்கோவில் நகராட்சி பகுதிகளில் சேர்மன் உமாமகேஸ்வரி ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்த காட்சி.

    சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் சேர்மன் ஆய்வு

    சங்கரன்கோவில் பகுதியில் நகராட்சி சேர்மன் உமா மகேஷ்வரி ஆய்வு செய்தார்.
    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட 20, 24,25-வது வார்டு பகுதிகளில் சேர்மன் உமாமகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குடிநீர் வசதி மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். பொதுமக்கள் அவரிடம் அடிப்படை வசதிகளை செய்து தரும்படி வலியுறுத்தினர்.

     இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

    இதில் மாவட்ட இளைஞரணி சரவணன், கவுன்சிலர் ஷேக்முகமது, ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இசக்கியப்பன், ம.தி.மு.க .நகர செயலாளர் ஆறுமுகசாமி, தி.மு.க. இலக்கிய அணி அபூபக்கர், மாணவரணி அப்பாஸ், குமார் ஜலால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×