search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் யூனியன் தலைவர் செல்லம்மாள் முருகன் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.
    X
    கடையம் யூனியன் தலைவர் செல்லம்மாள் முருகன் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

    விவசாயிகள் தொடர் போராட்டம் எதிரொலியாக கடையத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைப்பு

    கடையம் பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். அதன் எதிரொலியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
    கடையம்:

    கடையம் விளைநில பகுதிகளுக்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மீண்டும் அமைக்க வேண்டும் என்று கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் தலைமையில் விவசாயிகள் கடையம் யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் அலுவலகத்தை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்தினர். 

    நெல் கொள்முதல் நிலையம் கடையத்தில் அமைக்கப்படாத பட்சத்தில் ரோட்டில் நெல்லை கொட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது. 

    இதைத்தொடர்ந்து கடையத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார்.

     கடையம் ஒன்றிய பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி ராமகிருஷ்ணன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையம் வட்டார விவசாய சங்க தலைவர் பாலு வரவேற்றார். 

    கடையம் யூனியன் தலைவர் செல்லம்மாள் முருகன் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். விழாவில் நுகர்பொருள் வாணிப கழக அலுவலர் கணேசன், அரிமா சங்க நிர்வாகி கோபால், விவசாயிகள் ராமசாமி, வெள்ளபாண்டி, ஜெயராஜ், முத்துராமன், ஞானதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×