என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்9 March 2022 10:26 AM GMT (Updated: 9 March 2022 10:26 AM GMT)
நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது
நெல்லை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும்.
நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதன் பின்னர் சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க பங்குனி உத்திர திருவிழா கொடி யேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பின்னர் கொடிமரத்திற்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். உத்திர திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான வேணுவனத்தில் சுவாமி நெல்லையப்பர் தோன்றிய வரலாற்று திருவிழா வருகிற 12-ந்தேதியும், ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் விழா 18-ந் தேதியும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமராஜன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும்.
நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் வழிபாடு, கஜபூஜை, கோபூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுக்கு பின் கொடிப்பட்டம் எடுத்து வரப்பட்டது.
அதன் பின்னர் சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க பங்குனி உத்திர திருவிழா கொடி யேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பின்னர் கொடிமரத்திற்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். உத்திர திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான வேணுவனத்தில் சுவாமி நெல்லையப்பர் தோன்றிய வரலாற்று திருவிழா வருகிற 12-ந்தேதியும், ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் விழா 18-ந் தேதியும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமராஜன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X