search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்ட காட்சி.
    X
    கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்ட காட்சி.

    அரசு பஸ்களை சீராக இயக்க கோரி மனு

    மனுவை வாங்கிய கலெக்டர் உடனடியாக தீர்வு காண்கிறேன் என்று உறுதி அளித்தார்.
    அனுப்பர்பாளையம்:

    திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட ராக்கியாபாளையம், தேவராயம்பாளையம் பகுதிகளில் கி.29.11.ஙி.29 1.நி. ஆகிய பேருந்துகள் காலை மாலை வேளைகளில் சரியான நேரங்களில் வருவதில்லை. வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

    எனவே பொதுமக்களின் நலன் கருதி பஸ்களை சீராக இயக்க கோரி திருமுருகன்பூண்டி நகர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாவட்ட தலைவர் செந்தில்வேல் மற்றும் மாவட்ட துணை தலைவர் நடராஜ் மற்றும் மண்டல் தலைவர் சண்முக பாபு மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். மனுவை வாங்கிய கலெக்டர் உடனடியாக தீர்வு காண்கிறேன் என்று உறுதி அளித்தார்.
    Next Story
    ×