என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருநங்கைக்கு கல்வி உதவித்தொகை
Byமாலை மலர்2 March 2022 8:13 AM GMT (Updated: 2 March 2022 8:13 AM GMT)
தஞ்சை மதர்தெரசா பவுண்டேசன் சார்பில் திருநங்கைக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மதர்தெரசா பவுண்டேசன் கடந்த 20 ஆண்டுகாலமாக பல்வேறு நலத்திட்டப்பணிகளை சமூகத்தில் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. கொரானா பெருந்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா பெருந்தொற்றினால் முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்த திருநங்கையர் சமூகத்தினருக்கு மதர் தெரசா பவுண்டேசன் உதவி வருகிறது. அவர்களை உற்சாகமூட்டும் வகையில் புத்தொளி முகாம் மதர் தெரசா பவுண்டேசனில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மதர்தெரசா பவுண்டேசன் சேர்மன் சவரிமுத்து சமூகத்தினால் திருநங்கைகளுக்கு ஏற்படும் இன்னல்கள் மற்றும் சவால்களை துணிவுடன் எதிர்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சியில் உள்ள வெக்காளியம்மன் கல்வியல் கல்லூரியில் பயிலும் திருநங்கை சாயிஷாவிற்கு முதலாமாண்டு கல்வி உதவித்தொகை ரூ.30,000 வழங்கப்பட்டது. பவுண்டேசனால் கல்வி உதவி தொகை வழங்கப்படும் முதல் திருநங்கை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் சம்பத் ராகவன் வாழ்த்துரை வழங்கினார். அறங்காவலர்கள் கோவிந்தராஜ், முரளிகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். ஏற்பாடுகளை நிர்வாக மேலாளர் மெர்சி, திட்ட இயக்குநர் ரத்தீஸ்குமார், தளவாடமேலாளர் ஜெரோம், மக்கள் தொடர்பு அலுவலர்கள் ராணி, விஜி, வினோதினி மற்றும் கிறிஸ்டியா ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X