search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    பாண்டமங்கலம் பேரூராட்சியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வேட்பாளர்

    பாண்டமங்கலம் பேரூராட்சியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.
    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. 

    இதில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க வைச் சேர்ந்த 9 வேட்பாளர்களும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த 5 வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர். 

    இந்த பேரூராட்சியில் 3-வது வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் செல்வி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் பாப்பாத்தியை விட ஒரு வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

    தி.மு.க வேட்பாளர் பாப்பாத்தி 189 வாக்குகளும், அ.தி.மு.க வேட்பாளர் செல்வி 190 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
    Next Story
    ×