search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரே‌ஷன் அரிசியுடன் பிடிபட்ட லாரி
    X
    ரே‌ஷன் அரிசியுடன் பிடிபட்ட லாரி

    கேரளாவிற்கு லாரியில் கடத்த முயன்ற 10 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்

    நெல்லையில் இருந்து கேரளாவிற்கு லாரியில் கடத்த முயன்ற 10 டன் ரே‌ஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    நெல்லை:

    நெல்லையில் இருந்து கேரளாவிற்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.

    இதனால் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தனிப்படை மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் தீவிர சோதனை நடத்தி ரே‌ஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை நாங்குநேரி குற்றப்பிரிவு போலீசார் அங்குள்ள டோல்கேட் அருகே ரோந்து சென்றனர். அப்போது நெல்லையில் இருந்து குமரி நோக்கி வந்த லாரியை வழிமறித்து விசாரித்தனர்.

    அதில் இருந்த டிரைவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்து பார்த்தனர். அதில் மூட்டை மூட்டையாக ரே‌ஷன் அரிசி இருந்தது.

    இதுகுறித்து நெல்லை மாவட்ட குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் கோட்டை சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் லாரி டிரைவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் குமரி மாவட்டம் விளவங்கோடு அருகே உள்ள மூஞ்சிறை பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது.

    மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து ரே‌ஷன் அரிசி மூட்டைகளை கேரளாவிற்கு கடத்தி கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரி மற்றும் அதில் இருந்த 10 டன் ரே‌ஷன் அரிசி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.




    Next Story
    ×