search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வரி செலுத்தாதவர்கள் பெயர் விவரம் பொது இடங்களில் வைக்கப்படும் - காங்கயம் நகராட்சி அறிவிப்பு

    முதல்கட்டமாக அதிகமாக நிலுவை வைத்துள்ள 20 நபர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
    காங்கேயம்:

    காங்கயம் நகராட்சியில் அதிக வரி நிலுவையில் வைத்துள்ளவர்களின் பெயர்கள் பொது இடங்களில் வைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    இதுகுறித்து காங்கயம் நகராட்சி ஆணையர் சே.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    காங்கயம் நகராட்சியில் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் ஆகிய இனங்களில் நிலுவை உள்ளதை உடனடியாக செலுத்தும்படி நகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் பலர் இதுவரை வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர்.

    மேலும் வரி செலுத்தாமல் நகராட்சிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளவர்கள் பெயர் முகவரியுடன் பொதுமக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையம், சந்தை வளாகம், நகராட்சி அலுவலகம் போன்ற இடங்களில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

    இதில் முதல்கட்டமாக அதிகமாக நிலுவை வைத்துள்ள 20 நபர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் மேற்கண்ட பெயர் பலகையில் பெயர்கள் இடம் பெறாத வகையில் வரி விதிப்புதாரர்கள் உடனடியாக சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×