search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் கடை
    X
    ரேஷன் கடை

    தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும்

    தமிழகத்தில் ரேஷன் கடைகள் நாளை வழக்கம்போல் செயல்படுவதால் அட்டைதாரர்கள் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
    சென்னை:

    உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

    வரும் ஞாயிறு அன்று தமிழகத்தில் ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும்.

    பொது வினியோக திட்டத்தின் கீழ் ஜனவரி 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் பெறுவதற்காக நியாயவிலை கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இதற்கு பதிலாக பிப்ரவரி 26-ம் தேதி நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×