search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெல்லையில் மது விற்ற 6 பேர் கைது

    நெல்லையில் குடியரசு தின விடுமுறை நாளில் மது விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பகுதியில் குடியரசு தின விழாவையொட்டி நேற்று சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்கள் விற்பதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட மாநகர கமிஷனர் துரைக்குமார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாநகர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் மதுபாட்டில் களை பதுக்கி விற்பனை செய்த கண்ணன் (வயது52) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பாளையில் மது விற்ற சந்துரு என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 48 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதுபோல் மாநகராட்சி முழுவதும் மதுபாட்டில்களை பதுக்கி விற்றதாக மொத்தம் 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×