search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொழிப்போர் தியாகிகள் நினைவுதினம் அனுசரிப்பு.
    X
    மொழிப்போர் தியாகிகள் நினைவுதினம் அனுசரிப்பு.

    மொழிப்போர் தியாகிகள் நினைவுநாள் அனுசரிப்பு

    தஞ்சையில் மொழிப்போர் தியாகிகள் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று 57-ம் ஆண்டு மொழிப்போர் தியாகிகளின் நினைவேந்தல்    நிகழ்ச்சி பழைய பஸ் நிலையம் முன்பு பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சார்பில் நடைபெற்றது.
      
    இதற்கு முனைவர் தமிழறிஞர் இளமுருகன் தலைமை வகித்தார். இடதுசாரி பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மக்கள் கலை இலக்கிய கழகம் மாநில இணைசெயலாளர் ராவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     
    அப்போது புதிய தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிப்போம், பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×