search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இறைச்சி உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்த காட்சி.
    X
    இறைச்சி உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்த காட்சி.

    வீடுகளில் இறைச்சி விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்

    இறைச்சி விற்பனை செய்தவர்களுக்கு அபராதம் விதித்ததுடன் இறைச்சி உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கையொட்டி மளிகை, இறைச்சி உள்ளிட்ட கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இந்தநிலையில் சிலர் வீடுகளில் ஆடு, கோழிகளை வெட்டி  விற்பனை செய்து வருவதாக மாநகராட்சி  அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3,4 பேர் வீடுகளில் வைத்து இறைச்சி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அபராதம் விதித்ததுடன் அங்கிருந்த இறைச்சி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×