search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தவற விட்ட பணத்தை பெண்ணிடம் ஒப்படைத்த போலீசார்

    அபிநயா பல்லடம் கரடிவாவியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்வதும் தெரியவந்தது.
    திருப்பூர்;

    திருப்பூர் நல்லூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் சுரேஷ் கோவில் வழியில் உள்ள போலீஸ் சோதனைசாவடியில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் பஸ்  நிலையத்தில் ‘பர்ஸ்’ ஒன்றை யாரோ தவற விட்டு சென்றனர் என்று போலீஸ்காரர் சுரேஷிடம் ஒப்படைத்தார்.

    பர்சில் 10,400 ரூபாய் இருந்தது. இதையடுத்து சம்பள கவரில் இருந்த பனியன் நிறுவனத்துக்கு அழைத்து பேசினார். அப்போது பணத்தை தவற விட்டு சென்ற பெண்ணின் விபரம் தெரிந்தது. அவரை தொடர்பு கொண்ட போலீசார் விபரத்தை தெரிவித்தனர்.

    பின் அந்த பெண் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். விசாரணையில் மைசூரை சேர்ந்த அபிநயா(வயது 19) என்பதும், பல்லடம் கரடிவாவியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்வதும் தெரியவந்தது.

    சம்பளத்தை பெற்று கொண்டு கொடுவாய் வழியாக கோவில்வழி வந்து பின் பஸ் மாறி செல்லும்போது ‘பர்ஸ்’சை தவறவிட்டது தெரிந்தது. அந்த பெண்ணிடம் போலீசார் பணத்தை ஒப்படைத்தனர். சம்பந்தப்பட்ட போலீசாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.
    Next Story
    ×