என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
Byமாலை மலர்21 Jan 2022 10:54 AM GMT (Updated: 21 Jan 2022 10:54 AM GMT)
போலீசார் 8 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
காங்கேயம்:
காங்கேயம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பணம் வைத்து சட்ட விரோதமாக சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து காங்கேயம் டி.எஸ்.பி. குமரேசன் உத்தரவின் பேரில் நடுப்பட்டி என்ற பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போதுஅங்குள்ள தென்னந்தோப்பில் 8 பேர் கொண்ட கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
அவர்களை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் ( வயது 54), கதிர்வேல்(38), சபரிஷ்( 44), முருகானந்தம்( 45), பிரகாஷ்(40), விஸ்வநாதன்( 43), ராஜேஸ்வரன்(39), செந்தில்குமார்(35) என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ .2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X