search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் பீரோ உடைக்கப்பட்டிருக்கும் காட்சி
    X
    வீட்டில் பீரோ உடைக்கப்பட்டிருக்கும் காட்சி

    ஜேடர்பாளையம் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை

    ஜேடர்பாளையம் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை போனது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே குறும்பலமகாதேவி கிராமம் நரிமேட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் (65) விவசாயி. 

    இவரும் இவரது மனைவி பூங்கொடியும் (63) வீட்டை பூட்டி விட்டு ஜேடர்பாளையம் அருகே அய்யம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர்.

    வளைகாப்பு நிகழ்ச்சியை முடித்து விட்டு நேற்று மதியம் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

    பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் அறைக்குள் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து காளியப்பன் ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜேடர்பாளையம் போலீசார் திருட்டுப்போன இடத்தில் ஆய்வு செய்தனர். 

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு பதிந்திருந்த தடையங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×