என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு கொள்முதல் நிலையம் முன்பு நெல்லை கொட்டி வைத்து காத்து கிடக்கும் விவசாயிகள்
Byமாலை மலர்20 Jan 2022 9:24 AM GMT (Updated: 20 Jan 2022 9:24 AM GMT)
அன்னப்பன்பேட்டையில் ஒருவாரமாக அரசு கொள்முதல் நிலையம் முன்பு நெல்லை கொட்டி வைத்து காத்து கிடக்கும் விவசாயிகள் உடன் கொள்முதல் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
மெலட்டூர்:
பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை அதனை சுற்றியுள்ள வேப்பங்குளம்.
பொந்தையாகுளம், நரியனூர் மற்றும் நெய்தலூர் பகுதியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியாக நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடை பருவத்தை எட்டியுள்ளதால் விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியை தொடங்கி விட்டனர்.
அன்னப்பன்பேட்டை அரசு கொள்முதல் நிலையம் இன்னும் திறக்கப்படாத நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய அரசு கொள்முதல் நிலையம் முன்பும், சாலையோரமும் கொட்டி வைத்து ஒரு வார காலமாக காத்து கிடக்கின்றனர்.
இன்னும் சில விவசாயிகள் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை பருவம் தாண்டியும் நெற்பயிரை அறுவடை செய்யாமல் உள்ளனர்.
விவசாயிகளின் சிரமத்தை உணர்ந்து உடனடியாக அன்னப்பன்பேட்டை
அரசு கொள்முதல் நிலையத்தை திறந்து, நெல் கொள்முதல் செய்யும் பணியை விரைவில் தொடங்க வேண்டுமென விவசாயிகள் அரசு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X