search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்முதல் நிலையம் முன்பு குவிக்கப்பட்டுள்ள நெல்மணிகள்
    X
    கொள்முதல் நிலையம் முன்பு குவிக்கப்பட்டுள்ள நெல்மணிகள்

    அரசு கொள்முதல் நிலையம் முன்பு நெல்லை கொட்டி வைத்து காத்து கிடக்கும் விவசாயிகள்

    அன்னப்பன்பேட்டையில் ஒருவாரமாக அரசு கொள்முதல் நிலையம் முன்பு நெல்லை கொட்டி வைத்து காத்து கிடக்கும் விவசாயிகள் உடன் கொள்முதல் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை அதனை சுற்றியுள்ள வேப்பங்குளம். 

    பொந்தையாகுளம், நரியனூர் மற்றும் நெய்தலூர் பகுதியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியாக நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடை பருவத்தை எட்டியுள்ளதால் விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியை தொடங்கி விட்டனர்.

    அன்னப்பன்பேட்டை அரசு கொள்முதல் நிலையம் இன்னும் திறக்கப்படாத நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய அரசு கொள்முதல் நிலையம் முன்பும், சாலையோரமும் கொட்டி வைத்து ஒரு வார காலமாக காத்து கிடக்கின்றனர். 

    இன்னும் சில விவசாயிகள் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை பருவம் தாண்டியும் நெற்பயிரை அறுவடை செய்யாமல் உள்ளனர். 

    விவசாயிகளின் சிரமத்தை உணர்ந்து உடனடியாக அன்னப்பன்பேட்டை 
    அரசு கொள்முதல் நிலையத்தை திறந்து, நெல் கொள்முதல் செய்யும் பணியை விரைவில் தொடங்க வேண்டுமென விவசாயிகள் அரசு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×