search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாய் மீட்கப்பட்ட காட்சி.
    X
    நாய் மீட்கப்பட்ட காட்சி.

    செங்கோட்டையில் 40 அடி ஆழ கிணற்றில் விழுந்த நாய் மீட்பு

    செங்கோட்டை அருகே உள்ள கட்டளை குடியிருப்பு கிராமத்தில் நாய்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் எதிர்பாராத நேரத்தில் சுமார் 40 அடி ஆழம் கொண்ட ஊர் பொது கிணற்றில் ஒரு நாய் விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. அதனை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள கட்டளை குடியிருப்பு கிராமத்தில் நாய்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் எதிர்பாராத நேரத்தில் சுமார் 40 அடி ஆழம் கொண்ட ஊர் பொது கிணற்றில் ஒரு நாய் விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. 

    இதைக்கண்ட ஊர் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் செங்கோட்டை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சிவசங்கரன் தலைமையில் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
    Next Story
    ×